உலக மொழிகளில் சிறந்தது தமிழ் எவ்வாறு?

( தமிழர் ஆன்மவியலும் - தமிழர் சமயமும் - தமிழர் சமய மாநாடும் )
முனைவர்.மு.தெய்வநாயகம்

man is a soicial animal"என்பது ஆங்கில மொழியிலுள்ள பழமொழி. ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாக இருக்கிறது. உலகிலுள்ள அறிஞர் பெருமக்கள் அனைவரும், தாங்கள் எந்த மொழியைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும், தங்கள் கருத்துக்கள் உலகம் முழுவதும் அறியப்பட வேண்டுமென விரும்பினால், அவர்கள் ஆங்கில மொழியில் எழுதுவது அவர்களுக்கு இன்றியமையாததாய் ,இருக்கிறது. இதனால் ஆங்கில மொழி உலக அறிஞர்களால் வளப்படுத்தப்படுகிறது. உலக அறிஞர்களால் வளப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில மொழியிலுள்ள இந்தப் பழமொழி தவறானது என்பதைத் தமிழ் மொழியிலுள்ள ஆன்மவியல் நிரூபிக்கிறது. எவ்வாறு?மனிதன் வேறு, விலங்கு வேறு. மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் இந்த ஆங்கிலப்பழமொழி உலக அறிஞர்கள் மத்தியில் நிலை கொண்டிருக்கிறது. மனிதன் ஆறாவது அறிவை உடையவன் ஆனால் விலங்குகளுக்கு ஆறாவது அறிவு கிடையாது என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ள செய்தி, ஆறாவது அறிவைப் பற்றித் தெளிவில்லாத நிலையில் உலக அறிஞர்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதே இப்பழமொழி ஆகும். மனிதனுக்கும் விலங்குக்கும் உடல் இருக்கிறது உயிர் இருக்கிறது. மனிதனும் விலங்கும் உடலையும் உயிரையும் கொண்டுள்ளவர்கள் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கு இருக்கிறது. இந்த ஆறாவது அறிவின் விளைவாக மெய்யியல், சமயம், இறையியல் முதலியன மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்கிய இந்த ஆறாவது அறிவுக்குக் காரணமான மனிதம் சமய உலகில் ஆன்மா என்று குறிக்கப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியே ஆன்மவியல் என்பது ஆகும். ஆன்மாவைப் பற்றிய தெளிவான விளக்கத்தை இலக்கணத்தில் கொடுத்திருக்கும் ஆன்மவியல் உலக மொழிகளில் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியும், தமிழர்களும் இன்று அடிமைப்பட்டுள்ள நிலையில் இருப்பதால், தமிழ் மொழியின் இலக்கணத்திலுள்ள ஆன்மவியலின் சிறப்பு உலக அறிஞர்களால் அறிந்து கொள்ள இயலாத நிலையில் மறைந்து கிடக்கின்றது. உலகம் இதை அறியவில்லை.இதன் காரணமாக உலகப் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்தில் ஆன்மவியல் என்பதைக் குறிக்கும் ஆங்கில மொழிச் சொல் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் உயிருக்கும் ஆன்மாவுக்கும் வேறுபாடு தெரியாத நிலையில், உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றையும் கொண்டுள்ள மனிதனையும் சமப்படுத்திக் கூறும் தவறான ஆங்கிலப் பழமொழி இன்றும வழக்கில் இருக்கின்றது.
ஆன்மவியல் Soulologyஆன்மவியல் என்னும் தமிழ் இலக்கணம், ஆங்கில மொழிக்குக் கொடுக்கும் நன்கொடையாக "Soulology" என்னும் புதிய ஆங்கிலச் சொல் ஆங்கில மொழிக்கு இப்பொழுது கிடைக்கிறது. ஆங்கில மொழிக்குக் கிடைக்கும் இந்தப் புதிய வரவாகிய "Soulology" யின் செல்வாக்கு காரணமாக, "man is a soicial animal"என்னும் தவறான பழமொழி, படிப்படியாக வழக்கு இழந்து போகும் என்பதில் ஐயம் இல்லை. அதாவது விலங்குக்குச் சமமாக மனிதன் உண்ணப்பட்டு, விலங்கு வேட்டையாடப்படுவதைப் போன்று மனிதனும் வேட்டையாடப்படும் நிலை இன்று இருக்கிறது. இன்றைய உலக நிலை தமிழ் அலக்கணத்தின் ஆன்மவியலால் மாற்றி அமைக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகை மாற்றி அமைக்கக் கூடிய தமிழ் இலக்கணத்தின் ஆன்மவியலை இப்பொழுது நோக்குவோம். தமிழ் இலக்கணம் கூறும் ஆன்மவியல் ஐந்து பகுதிகளை உடையது ¼வை வருமாறு (1) உடல் (2) உயிர் (3) ஆன்மா (4) கடவுள் (5) ஆணவமலம்
உடல் மேற்குறிப்பிட்ட ஐந்றது பகுதிகளில் உடல் அனைவராலும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியது. அறிவியல் உடலை விளக்க முற்படுகிறது.
உயிர்இதுவரை வளர்ந்துள்ள நம்முடைய அறிவியல் உயிரைப் பற்றிய விளக்கத்தைக் கூற முற்படவில்லை. உயிரையுடைய மனிதனுக்கும், உயிரற்ற பிணத்திற்கும் வேறுபாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இன்றைய அறிவியல் உலகை விளக்க முற்படுகிறதேயன்றி உயிரை விளக்க முற்படவில்லை. அறிவியல் விளக்க இயலாத இடத்திலிருந்து மெய்யியல் தன் விளக்கத்தைத் தொடங்குகின்றது. மெய்யியல் உயிரை விளக்க முற்படுகிறது.
கடவுள் மெய்யியல் உயிரை விளக்க முற்படுவதைப் போன்று கடவுளை முழுமையாக விளக்க இயலவில்லை. கடவுளை விளக்க இன்னொரு கல்வி தேவைப்படுகிறது. மெய்யியலால் முழுமையாக விளக்க முடியாத இடத்திலிருந்து, இறையியல் தனது விளக்கத்தைத் தொடங்குகிறது. இன்றைய இறையியல், குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த புனித நூலை அடிப்படையாகக் கொண்டு, நம்பிக்கை சார்ந்த விளக்கத்தைக் கொடுக்கிறதேயன்றி மதங்களைக் கடந்து நிற்கும் கடவுளை விளக்கும் இலக்கண வடிவில் இன்றைய இறையியலின் விளக்கம் இல்லை.
ஆன்மாஉடலைப் பற்றி ஆராய்ந்து கூற முற்படும் அறிவியல், உயிரைப் பற்றி ஆராய்ந்து கூற முற்படும் மெய்யியல், கடவுளைப் பற்றி ஆராய்ந்து கூற முற்படும் இறையியல் ஆகிய இவை அனைத்தும் ஆறாவது அறிவையுடைய மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளவை. ஆறாவது அறிவுக்கு காரணமான மனிதம் அல்லது ஆன்மாவைப் பற்றி ஆராய்ந்து கூறும் ஆன்மவியல், இதுவரை உலகுக்குத் தெரியவில்லை என்பதைப் பார்த்தோம். இதற்கு காரணம் ஆன்மவியலை ஆழ்ந்து கூறும் தமிழ் இனமும் தமிழ் மொழியும் அடிமைப்பட்டு மறைந்து கிடக்கின்றமை ஆகும். இன்று உலகின் கண்களுக்கு மறைந்து கிடக்கும் தமிழ் மொழியின் இலக்கணத்திலுள்ள ஆன்மவியல் உண்மைகளை நோக்குவோம்.
1. மெய்யியல் நோக்கில் தமிழ் எழுத்துக்களின் பெயர்கள் தமிழ் மொழியின் இலக்கணத்திலுள்ள ஆன்மவியல் இலக்கணத்தைப் பார்ப்பதற்கு முன்னர் தமிழ் இலக்கணத்தின் முதல் பகுதியாக விளங்கும் தமிழ் எழுத்துக்களுக்கு, தமிழர்கள் கொடுத்துள்ள பெயர்களை நோக்குவோம். தமிழ் எழுத்துக்களுக்குப் பெயர்கொடுத்துள்ள தமிழர்கள்1. உயிர் எழுத்து என்றும் 2. உடல் எழுத்து அல்லது மெய் எழுத்து என்றும் 3. உயிரும் உடலும் இணைந்து நிற்கும் உயிர்மெய் எழுத்து என்றும் மெய்யியல் நோக்கில் பெயர் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணி மகிழத்தக்கது. மெய்யியல், இறையியல் ஆகிய இரண்டும் ஆன்மவியலில் அடங்குகின்றன. ஏனெனில் ஆன்மாவையுடைய மனிதனே இவை இரண்டையும் ஆராயும் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான்.
2. திணை இலக்கணம் திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கிறது. உயர்ந்த ஒழுக்கத்திற்கு வழி நடத்துவது ஆறாவது அறிவு. ஆறாவது அறிவையுடைய மனிதனும் கடவுளும் உயர்ந்த ஒழுக்கத்திற்கு உரியவர்கள். இதனால் மனிதனையும் கடவுளையும் உயர்திணை என்னும் பிரிவில் தமிழ் இலக்கணம் அடக்குகிறது. ஆறாவது அறிவு இல்லாத, உயிரினங்களையும் உயிரற்றவற்றையும், அஃறிணை (உயர்திணை அல்லாதவை) என்னும் பிரிவில் தமிழ் இலக்கணம் அடக்குகிறது. ஆறாவது அறிவை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டிருக்கும் திணை இரக்கணம் உலக மொழிகளில், தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை இன்று உலகப் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்திலும் இல்லை. இது ஏன்? என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. எழுதப்படுவது - எழுத்து எழுத்துகளின் இணைப்பு - சொல் சொல்லில் இருக்க வேண்டியது - பொருள் பொருளுள்ள சொற்களின் இணைப்பு - யாப்பு யாப்பிற்குச் சிறப்பு - அணி ஒரு மொழிக்கு இருக்க வேண்டிய இலக்கணப் பிரிவுகள், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐந்து ஆகும். உலக மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே இந்த ஐந்து பிரிவு இலக்கணங்களையும் கொண்டு முழுமையாக விளங்குகின்றது. தமிழ் தவிர மற்ற உலக மொழிகள் அனைத்தும் ஐந்து இலக்கணப் பிரிவுகளில் ஒன்று குறைந்து நான்கு இலக்கணப் பிரிவுகளை மட்டுமே உடையனவாக விளங்குகின்றன. தமிழ் மொழியில் மட்டுமே உள்ள, மற்ற உலக மொழிகளில் இல்லாத அந்த ஒரு பிரிவு எது? அந்தப் பிரிவே பொருள் இலக்கணம் ஆகும.
3. பொருள் இலக்கணம் பொருள் இலக்கணம் இரு பிரிவுகளையுடையது. (1) அகப்பொருள் அல்லது அகத்திணை (2) புறப்பொருள் அல்லது புறத்திணை ஆறாவது அறிவையுடைய மனிதர்களால் உள்ளத்தில் அனுபவிக்கப்படுவதும், இஃது இன்னவாறு இருந்தது என்று புறத்தே எடுத்துச் சொல்லி நிலைநாட்டக் கூடாததுமான பொருள் அகப் பொருள் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆறறிவையுடைய ஆன்மாவும் கடவுளும் இணைந்து இன்புறும் பேரின்ப நிலை தமிழ் மொழியில் அகப் பொருள் இலக்கணத்தில் உணர்த்திக் காட்டப்படுகிறது. பைபிளிலுள்ள உன்னதப்பாட்டு திருக்குறளிலுள்ள இன்பத்துப்பால் மாணிக்கவாசகரின் திருக்கோவையார் இராமலிங்க அடிகளாரின் ஆறாம் திருமுறை ஆகிய பேரின்ப இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பகுதி தமிழ் மொழியிலுள்ள பொருள் இலக்கணத்தின் அகத்திணையைக் கூறும் அகப்பொருள் ஆகும். அதாவது, உலகிலுள்ள மொழிகளில் மனிதன் கடவுளோடு பெறும் அனுபவத்தை இலக்கியத்தில் மட்டுமல்லாது, இலக்கணத்தில் வரையறுத்துக் கூறும் தகுதியைப் பெற்றிருக்கும் மொழி தமிழ் ஒன்றே என்றாகிறது.
4. ஆன்மவியல் உலகிலுள்ள மொழிகள் உயிதைப் பற்றி ஆராயும் மெய்யியலையும், இறைவனைப் பற்றி ஆராயும் இறையியலையும் கொண்டு விளங்குகின்றன. தமிழில் மட்டுமே, உயிரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராயும் ஈஆற்றலையுடைய ஆறாவது அறிவுக்குக் காரணமான மனிதம் அல்லது ஆன்மாவைப் பற்றிய தெளிவான ஆராய்ச்சியையுடைய ஆன்மவியல் இருக்கிறது. அதாவது மற்ற உயிரினங்களைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆராயும், தன்னிடமுள்ள குறைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவு பெறும் நிலையை எண்ணிப் பார்க்காமல் இருப்பானானால், அவனுடைய மற்ற ஆராய்ச்சிகளால் அவனுக்குப் பயன் என்ன? ஒரு பயனும் இல்லை அல்லவா? இதனால் ஆன்மவியலைப் பற்றி அறியாத மெய்யியலும், இறையியலும் முழுமை பெறாதவைகளாக இதுக்கின்றன. இதன் காரணமாகவே இன்றைய மனித சமுதாயம், உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தும், மெய்யியல், இறையியல் ஆராய்ச்சிகள் இருந்தும், தன்னையும் தன்னைப் படைத்த இறைவனையும் சரியாக உணர இயலாமல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. நிலை தடுமாறி நிற்கும் இன்றைய மனித சமுதாயத்தின் தேவை, மனிதன் தன்னைப் பற்றி அறியும் ஆன்மவியல் அறிவு ஆகும். மனிதன் தன் உடலைப் பற்றியும்,தன் உடலை அழியாமல் பாதுகாக்குப்படும் தன் உடலைப் பயன்படுத்தித் தன் விருப்பங்களை நிறைவேற்றும மனிதம் அல்லது ஆன்மா பற்றியும், ஆன்மாவாகிய தன்னைப் படைத்த கடவுளை அறிய இயலாமல் தன்னைத் தடுக்கும் தன்னுடைய ஆணவமலத்தைப் பற்றியும், ஆணவமலயத்திலிருந்து தன்னை விடுவிக்கும் கடவுளைப் பற்றியும் அறிவதற்கு வழிநடத்துவதே ஆன்மவியல் ஆகும். இந்த ஐந்தையும் தருக்கவியல், அறிவியல் அடிப்படையில் விளக்குவது ஆன்மவியல் மொழியாகிய தமிழ் மொழியிலுள்ள ஆன்மவியல் இலக்கண நூலாக விளங்குவது சிவஞானபோதம். அன்பு எனும் குணம் தமிழில் சிவம் என்று அழைக்கப்படுகிறது. அன்புடைய கடவுளைப் பற்றிய ஞானத்தை ஆன்மா அறியுமாறு ஆன்மாவுக்குப் போதிப்பது = சிவஞானபோதம். உலக சமயங்களில் அனைத்திற்கும் பொதுவான ஆன்மவியல் நூல். உலக சமயங்களின் புனித நூல்கள் அனைத்தையும் இலக்கியமாகக் கொண்டு, அவ்விலக்கியங்களின் சாரமாகிய இலக்கணமாக விளங்குவதே சிவஞானபோதம் கூறும் ஆன்மவியல்.
5. ஆன்மவியல் மொழி கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எனும் கேள்வி எழுப்பப்படுமானால் மதங்களைக் கடந்தவர் கடவுள், அவர் எந்த மதத்திற்கும் உட்பட்டவர் அல்லர் அனைத்து மதங்களும் கடவுளை அறிய முயலுகின்றன என்பதே பதிலாக அமைகிறது. அப்படியானால் கடவுளை உணர்ந்த மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? என்னும் கேள்வியை எழுப்பினால் அனைத்து மதங்களும் அவர்களுடைய மதங்களே என்பதும், அனைத்து மதங்களையும் அரவணைப்பவர்களே அவர்கள் என்பதும் பதிலாக அமைகிறது. இந்த நிலையில் அனைத்து மதங்களையும் அரவணைக்கும், எல்லா மதங்களுக்கும் பொதுவான அகப் பொருள் இலக்கணம் உடையதாகத் தமிழ் மொழி விளங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். அனைத்து மதங்களையும் அரவணைக்கும், அனைத்து மதங்களுக்கும் பொதுவான அகப்பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதற்குக் காரணம், தமிழ் மொழி ஒரு ஆன்மவியல் மொழியாகும். ஆன்மவியல் மொழிக்கு குறிப்பிட்ட மதச் சார்பு கிடையாது. அதனால் ஆன்மவியல் மொழியாகிய தமிழில் சமணம், பெளத்தம், கிறித்தவம், சைவம், வைணவம், இசுலாம் ஆகிய உலகப் பெரும் சமயங்கள் அனைத்திற்கும் காப்பியங்கள் இருக்கின்றன. இவ்வாறு உலகப் பெரும் சமயங்கள் அனைத்திற்கும் காப்பியங்களைக் கொண்டுள்ள மொழி, உலகில் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் இல்லை. இதனால் தமிழ் மொழி ஆன்மவியல் மொழியாக விளங்குகிறது என்பதில் ஐயம் இல்லை. மெய்யியல், இறையியல் ஆகிய இரண்டும் உலக சமயங்களின் பகுதிகளாக விளங்குகின்றன. உலக சமயங்களின் பகுதிகளாக விளங்குகின்றன. உலக சமயங்களின் பகுதிகளான மெய்யியலாலும், இறையியலாலும் முழுமையாக விளக்க இயலாத ஆன்மவியல் உண்மைகளைத் தமிழ் மொழி விளக்குகிறது என்றால், இது தமிழர் சமயத்தின் பகுதியாக விளங்குகிறது என்பது பெறப்படுகிறது.
6. தமிழர் சமயம் திணை இலக்கணம் பொருள் இலக்கணம், ஆன்மவியல் இலக்கணம் ஆகியவறிறைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆன்மவியல் மொழியாக உலக மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே விளங்குகின்ற தன்மையைப் பார்த்தோம். மெய்யியல், இறையியல் ஆகிய இரண்டும் உலக சமயங்களின் பகுதிகளாக விளங்குகின்றன. உலக சமயங்களின் பகுதிகளான மெய்யியலாலும், இறையியலாலும் முழுமையாக விளக்க இயலாத ஆன்மவியல் உண்மைகளைத் தமிழ் மொழி விளங்குகிறது என்றால், இது தமிழர் சமயத்தின் பகுதியாக விளங்குகிறது என்பது சொல்லாமலே புரியக் கூடிய ஒன்றாகும். தமிழர் சமயத்தின் ஆன்மவியல், உலக சமயங்களின் சாரமாக விளங்குவதால், உலக சமயங்களின் பொதுப் பெயராகத் தமிழர் சமயம் என்பது விளங்குகிறது. தமிழர் சமயத்தின் வளர்ச்சிப்படி நிலைகள் ஏழனையும் ஆராந்தால், உலக சமயங்கள் அனைத்தையும் இணைத்துத் தமிழர் சமயம் வளர்ந்துள்ள வரலாறு தெளிவாகத் தெரியும்.ஆகவே, உலக சமயங்கள் அனைத்தையும் இணைத்து நிற்கும் பொதுப் பெயராகத் தமிழர் சமயம் விளங்குவதைத் தமிழர் சமய வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. இதனாலேயே தமிழர் ஆன்மவியல் இலக்கணத்தைக் கூறும் சிவஞானபோதம், ஆதிப் பெற்றோரின் தோற்றம் தொடங்கி, அது எழுதப்பட்ட கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை உலகில் தோன்றிய அனைத்துச் சமயங்களின் சாரமாக விளங்குகிறது. கடவுள் எவ்வாறு அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராக விளங்குகின்றாரோ, அவ்வாறே ஆன்மவியல் மொழியாகிய தமிழ் மொழியும், தமிழ் மொழியில் உருவான தமிழர் சமயமும், தமிழர் சமயத்தில் உருவான தமிழர் ஆன்மவியல் இலக்கணமும் உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக விளங்குகின்றன.
7. உணர்த்த உணர்தல் இத்துணை சிறப்புடைய தமிழ் மொழியும் தமிழ் இனமும், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, 1. தமிழ் மொழி ஒரு நீச மொழி - என்றும் 2. தமிழ் இனம் ஒரு நீச இனம் - என்றும் 3. தமிழ் மொழியும் தமிழ் இனமும், தமிழ் நாட்டுக் கோவில் கருவறையில் கால் வைக்கத் தகாத இழி பிறவிகள் என்றும் இகழப்படும் கொடுமை தமிழ் மக்கள் அதிகம் வாழும் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழர்கள், தங்கள் இனத்தின் சிறப்பை உணரவில்லை. தங்கள் மொழியின் சிறப்பை உணரவில்லை. தங்கள் ஆன்மவியல் சிறப்பை உணரவில்லை. தங்கள் சமயமாகிய தமிழர் சமயத்தையும் அதன் சிறப்பையும் உணரவில்லை. தமிழர்கள் தன்னுணர்வில்லா அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு கொண்டிருக்கும் கொடிய அடிமைத்தனத்தில் இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் ஆணவமலம் இவர்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது. இவர்களை விடுவிப்பது யார்? தன்னை உணர இயலாத நிலையில் ஆணவமலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவை, இறைவன் குருவாக வந்து தம்முடை ய தவத்தால் உணர்த்துகின்ற காரணத்தால், உணர்த்த உணர்ந்து தன் அடிமைத் தளையிலிருந்து விடுதலைஅடைகிறது ஆன்மா என்பது தமிழர் ஆன்மவியலைக் கூறும் சிவஞானபோதம் உணர்த்தும் உண்மையாகும். இந்த உண்மையின்படி இறைவன் உணர்த்த தமிழர்கள் உணர்ந்து விடுதலையடையும் காலம் நெருங்கி விட்டது என்பதற்கு, மறைந்து கிடந்த ஆன்மவியல் உண்மைகளை, கடவுள் வெளிவரச் செய்திருப்பதே எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
8. பெற்றோரும் பிள்ளைகளும்தமிழ் மொழியும் தமிழர் ஆன்மவியல் கொள்கைகளும தமிழர் சமயமும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. பெற்றோர் பிள்ளைகளை ஒன்றிணைத்து அரவணைப்பதைப் போன்று, தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழர் ஆன்மவியல் கொள்கையும், தமிழர் சமயமும் உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைப்பவை என்பதை யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் தமிழர் கொள்கைகள் உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.
9. இயக்கமும் மாநாடும் தமிழர் கொள்கைக்கு அடிப்படையாக விளங்கும் தமிழர்களின் ஆன்மவியல் சிறப்புகளை உலகெங்கும் பரப்புவதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பே, உலகத் தமிழர் என்னும் பெயரில் உலக மக்களை எல்லாம் ஒன்றிணைக்கும் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கம் ஆகும். உலகத் தமிழர் ஆன்மவியல் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில், தமிழர் சமய உலக முதல் மாநாடு தமிழ் நாட்டின் தலைநகராகிய சென்னையில் 2008 ஜனவரி 13 முதல் 16 வரை பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட இருக்கிறது. உலகிலுள்ள அனைத்துச் சமயங்களின் பொதுப் பெயரே தமிழர் சமயம் என்பதைப் பார்த்துள்ளோம். உலக சமயங்களில், உலகளாவிய தலைமையைக் கொண்டுள்ளதும், மற்ற சமயங்களிலும் உண்மையுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதும், மற்ற சமய அறிஞர்களுடன் கலந்துரையாடல் நடத்து மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்து சமய ஒருமைப் பாட்டை வளர்த்து வருவதுமான கத்தோலிக்கத் திருச்சபையின், உலகத் தலைவராகிய போப்பாண்டவரின் கீழ் இயங்கும் தமிழகத்தின் தலைமையிடமாகிய சென்னையில் உள்ளதுமான சென்னை - மயிலை கத்தோலிக்கப் பேராயத்தின் துணையுடன் இணைந்து இம்மாநாடுநடத்த திட்டமிடப்பட்டு, 2007 மே மாதம் 15 முதல் 19 வரை மாநாட்டில் கட்டுரை படிக்க விரும்பும் பல்கலைக் கழகங்களின் அறிஞர்களுக்குத் தமிழர் சமய அறிமுகக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தமிழர் சமய மாநாடு சிறப்புற நடைபெறுவதற்குத் துணை நிற்க விரும்புகின்ற, மற்ற மதங்களிலும் உண்மை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் அனைத்துச் சமய அமைப்புகளும் வரவேற்கப்படுகின்றன.


மேலும் விவரங்களுக்கு,
உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கம்,
278, கொன்னூர் நெடுஞ்சாலை,
அயன்புரம், சென்னை - 600 023.

1 comment:

Unknown said...

மிக மிக அற்புதம் நண்பரே...