கடவுள் இயல்

உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?
இறைவன்.

இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?
சிவபெருமான்.

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?
சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவபெருமான் எப்படிப் பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.

சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?
சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.

மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்।

அருளலாவது யாது?
ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.

தனு கரண புவன போகம் என்றது என்ன?
தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.

சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?
தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை

சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?
உமாதேவியார்

சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?
திருக்கயிலை மலை.

சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்? சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.

சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது? சைவம்

சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?
திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.
இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?
சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.

சிவ புண்ணியம் யாது?
சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.
உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?
1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.
புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.
பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.
பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.

சின்ன வீட்டு ராணி

சின்ன வீட்டு ராணி எங்க ராணி
சிங்காரத் தங்கநிறம் அவள் மேனி
கொள்ளைக்காரன் போலே
எல்லை தாண்டிவந்த
கொடியவரை அழிக்கும் கோபராணி
எங்கள்
-அடிமைதனை அகற்றும
அன்புராணிமெய்யாரப்
பொய்கூறும்வீணர்களின்
மத்தியிலேநையாத கொய்யாக்கனி
எங்க ராணி - ஒய்யாரக்கண்ணின் மணி
மங்கையரின் பக்கத்திலேமயல்போலே
- கெட்டவம்புக்கார
கும்பலுக்குப்புயல்போலே
செங்கமலச் செவ்விதழைமுகத்தாலே
- வென்றுமங்காத
அன்புதனைவளர்ப்பாளே
வாளெடுத்து வீசுவா
மானங் காக்க
ஏழை மக்கள் பக்கம் பேசுவா
துன்பம் தீர்க்க
தேவைக்கு மேல்
சேர்த்து வச்சாதேடி
எடுப்பாதின்ன
உணவில்லாதவர்கையில்
கொடுப்பா
செல்வியவள்
கண்ணாலேபொல்லார்
தனைக் கண்டால்žறிவரும்
வேங்கையாம்
வீராங்கனைமானங்கெட்டு
ரோஷம் விட்டுவலிய வந்து
குந்திக்கிட்டுமாருதட்டும்
சூரப்புலி மண்டை உருள.........
அங்கு - மற்றுமுள்ள
ஒற்றர்களும் கண்டு
மருளவான்முட்டவே முழக்கம்
மாபெரிய கூட்டத்திலேமங்கையவள்
செங்குருதி நீராடினாள்
- வீரப்பெண்கள் புகழ் ஓங்கி

நட்பு

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு

சிகாகோ தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்வு

சிகாகோ: சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 2008ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக வீரவேணுகோபால், துணைத் தலைவராக தோனி சூசை, செயலாளராக ராம்ரகுராமன், இணைச் செயலாளராக மீனாசுப்ரமணியன், பொருளாளராக ராமகிருஷ்ணன், இணை பொருளாளராக கிருஷ்ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

எங்களிடம் தவறேதுமில்லை: கில்கிறிஸ்ட்

சிட்னி: களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தையில் தவறேதுமில்லை என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கையில்," மன்னிப்பு கோரும்படியான நடத்தை எதுவும் எங்கள் வீரர்களிடமிருந்து வெளிப்படவில்லை. கும்ளே குறிப்பிடுவது போல விளையாட்டுக்கான நல்ல மனப்பான்மை எதையும் நாங்கள் இழக்கவில்லை. டிரா செய்யப்படுமோ என்ற நேரத்தில் தான் சிறப்பாக ஆடி டெஸ்டை கைப்பற்றியுள்ளோம். முதலில் இந்திய அணியின் கை ஓங்கியிருந்தது. பின்பு தலைகீழாய் மாறியது, என்றார்.

தம்பா தமிழ்ச்சங்க ப‌ொங்கல்விழா

புளோரிடா: தம்பா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 2008ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ரவிநாராயணன், துணைத் தலைவராக பிச்சப்பன் பெத்தாட்சி, செயலாளராக சண்முகசுந்தரம், பொருளாளராக கிருஷ்ணராஜ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் மூலம் பொங்கல்விழா ஜன. 19ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. புளோரிடா, சைப்ரஸ் ப்ரூக் ரோட்டில் உள்ள இந்து கோயிலில் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது.

தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்வு

சான்பிரான்சிஸ்கோ: வளைகுடா பகுதி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 2008க்கான புதிய நிர்வாகியாக ஜெயவேல் முருகன் ‌தேர்வு செய்யப்பட்டார். நிர்வாக துணைத் தலைவராக சித்ரா, கலாச்சார துணைத் தலைவராக பிரியா, பொருளாளராக சுமதி, அமைப்பாளராக ராஜேஷ்சாம்பசிவம், இளைஞரணி பிரதிநிதியாக காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி

சிட்னி, ஜன. 5: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 69 ரன் முன்னிலை பெற்றது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது 38வது சதத்தை விளாசினார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 463 ரன் குவித்து ஆட்டமிழந்தது. சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 167* ரன் எடுத்தார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்தது. சச்சின் 9 ரன், கங்குலி 21 ரன்னுடன் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சச்சின் கொஞ்சம் பொறுமையாக விளையாட, பார்மில் உள்ள கங்குலி அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார்.
இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். கங்குலி 67 ரன் (78 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஹாக் பந்தில் ஹ§சேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
திடீர் சரிவு: அடுத்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் வெறும் 12 ரன் மட்டுமே எடுத்து லீ வேகப்பந்தில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி விக்கெட் கீப்பர் டோனி, கேப்டன் கும்ப்ளே இருவரும் தலா 2 ரன்னில் வெளியேற இந்திய அணி திடீர் சரிவை சந்தித்தது.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து தெம்பாக இருந்த இந்தியா, மேற்கொண்டு 52 ரன் சேர்த்து 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, இந்திய அணியை விரைவில் சுருட்டி விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆஸி. வீரர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
சச்சின் அபாரம்: அது வரை பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த சச்சின், அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மறுமுனையில் ஹர்பஜன் சிங் பொறுப்புடன் ஒத்துழைக்க, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
அபாரமாக விளையாடி ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த சச்சின், டெஸ்ட் போட்டிகளில் தனது 38வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சச்சின் & ஹர்பஜன் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறினர்.
சிறப்பாக விளையாடிய ஹர்பஜன் அரைசதம் அடித்தார். அவர் 63 ரன் (92 பந்து, 8 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் & ஹர்பஜன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்து புதிய சாதனை படைத்தது. அடுத்து வந்த ஆர்.பி.சிங் 13 ரன், இஷாந்த் ஷர்மா 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 532 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சச்சின் 154 ரன் (243 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் லீ 5, ஜான்சன், ஹாக் தலா 2, ஸ்டூவர்ட் கிளார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 69 ரன் முன்னிலை பெற்றது. அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது. ஜேக்கஸ் 8, ஹேடன் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

வாழ்த்துக்கள்

திறவு வலைத்தளத்திற்க்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்