கல் நெஞ்சம்

உன் உதடுகள்
மலடுகளா-காதலை
பிரவேசிக்க
மறுக்கிறது

உடன்படிக்கை


நண்பன்


நட்பு

போட்டி வேண்டாம்

ரோஜா : ஓ....மல்லியக்கா

மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தௌிச்சு
வாரவங்க எல்லோரையும்
மயக்கப் போறேன்
மணப்பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்

ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே,
நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்
நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
வதங்கப் போறே,
நான் வாரவங்க கையில் எல்லாம்
குலுங்கப் போறேன்-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
சொல்வாங்க - பெரும்
கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
கொடுப்பாங்க,
காத்தடிச்சா போதும் என்னைக்
காணத்துடிப்பாங்க - ஓன்னை
கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
முகஞ்சுளிப்பாங்க - அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
மலிஞ்சு போறவ!

மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
உதிர்ந்து போறவ!

ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
தேடிப்புடிச்சவ!

மல்லி : அதுக்கு வகையில்லாமெ
தனிச்சு நின்னு!-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

(தாமரை வருதல்)

தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லு தங்கச்சி?

தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
மனிதரைப் போல வம்புகள் பேசி
பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

தாமரை : உலகில் சிறந்தது என்ன?

மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

தாமரை : அதை நாம் உணர்ந்து
நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
இருக்கவேணும்!-அப்போதுதான்
உலவும் சமாதானம்-எங்கும்
நிலவும் சமாதானம்!

மூவரும் : அதை நாம் உணர்ந்து
நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்றாய்
இருந்திடுவோம்!

சூதாட்டம்

சூதாடி மாந்தர்களின்
சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனல்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல )

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே ( சொல்ல )

பாரதிக்கு நிகர் பாரதியே

வீரபாண்டிய கட்டபொம்மன்


" ....தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. ... இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்..."
----------------------------------------------------------------------------


உலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.
இவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.
சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.
கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.
1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.
அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.
வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.
இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.
இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.
பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.
பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.
கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.
வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்
கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.
கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.
கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.
விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.

நாடாரை நாடென்றார்

To enhance the vannam, Kanna Dhasan used the same word repeatedly in each line. The poem was sung in praise of Kamaraja nadar (காமராஜ நாடார்) and the word (நாடார்).

சொத்து சுகம் நாடார்,
சொந்தந்தனை
நாடார்பொன்னென்றும் நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்தஅன்னையையும் நாடார்,
ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன்
நலமொன்றும்
நாடாதநாடாரை நாடென்றார்.
எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்

பாரதி


கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி" - பாரதி

பாரதியின் கனவு

பாரத தேச மென்று பெயர்சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர் தங் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறிலை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்

இர‌யி‌ல்க‌ள் ‌நி‌ன்று அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌ம் இ‌ந்‌தியா‌வி‌ன் ரா‌பி‌ன் ஹூ‌ட்



ந‌ம்‌‌பினா‌ல் ந‌ம்பு‌ங்க‌ள் தொட‌ரி‌ல் இ‌ந்த வார‌ம் உ‌ங்களு‌க்கு மறை‌‌ந்து‌ம் மறையாம‌ல் வா‌ழ்‌ந்துவரு‌ம் ஒரு வீரரை அ‌‌றிமுக‌ப்படு‌த்து‌கிறோ‌ம்.

ம‌த்‌திய‌ப் ‌‌பிரதேச மா‌நில‌ம் மோ‌வ் எனு‌ம் பகு‌தி‌யி‌ல் வா‌ழ்‌ந்து வருபவ‌ர்களு‌க்கு இ‌ன்றளவு‌ம் அவ‌ர் வா‌‌ழ்‌ந்து வரு‌கிறா‌ர்.

டா‌ண்டியா ‌பீ‌ல் எ‌ன்பவரை‌ப் ப‌ற்‌றிய கதை இது.

இ‌ந்‌தியா‌வி‌ன் ரா‌பி‌ன் ஹூட் எ‌‌ன்றழை‌க்க‌ப்ப‌ட்ட தா‌‌ண்டியா ‌பீ‌ல், இ‌ந்‌திய ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது வெ‌ள்ளைய‌ர்களை எ‌தி‌ர்‌த்து‌க் கடுமையாக‌ப் போராடினா‌ர்.




ம‌‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ன் மோ‌வ் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் மா‌ல்வா பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து சா‌த்பூரா மலை‌த் தொட‌ர்களி‌ல் உ‌ள்ள ஜா‌ல்கா‌வ் வரை அவ‌ர் முடிசூடா ம‌ன்னராக இரு‌ந்து‌ள்ளா‌ர்.

‌பி‌ரி‌ட்டி‌ஷ்கார‌ர்க‌ளிட‌ம் கொள்ளையடி‌த்து அதனை ஏழை ம‌க்களு‌க்கு‌ம் மழைவா‌ழ் ம‌க்களு‌க்கு‌ம் டா‌ண்டியா ‌பீ‌ல் ப‌கி‌ர்‌ந்த‌ளி‌த்து‌ அவர்களின் வறுமையைப் போக்கியுள்ளார்.

டா‌ண்டியா ‌பீலைப் பிடி‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்தா‌ல் பெரு‌ம் ச‌ன்மான‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ம் அவரை‌ப் பிடி‌க்க முடிய‌வி‌ல்லை. அவரு‌க்கு‌ச் ‌சில அ‌திசய‌ச் ச‌க்‌திக‌ள் இரு‌ந்ததா அ‌ப்பகு‌தி ம‌க்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்ந‌ம்‌‌பினா‌ல் ந‌ம்பு‌ங்க‌ள் தொட‌ரி‌ல் இ‌ந்த வார‌ம் உ‌ங்களு‌க்கு மறை‌‌ந்து‌ம் மறையாம‌ல் வா‌ழ்‌ந்துவரு‌ம் ஒரு வீரரை அ‌‌றிமுக‌ப்படு‌த்து‌கிறோ‌ம்.

ம‌த்‌திய‌ப் ‌‌பிரதேச மா‌நில‌ம் மோ‌வ் எனு‌ம் பகு‌தி‌யி‌ல் வா‌ழ்‌ந்து வருபவ‌ர்களு‌க்கு இ‌ன்றளவு‌ம் அவ‌ர் வா‌‌ழ்‌ந்து வரு‌கிறா‌ர்.

டா‌ண்டியா ‌பீ‌ல் எ‌ன்பவரை‌ப் ப‌ற்‌றிய கதை இது.

இ‌ந்‌தியா‌வி‌ன் ரா‌பி‌ன் ஹூட் எ‌‌ன்றழை‌க்க‌ப்ப‌ட்ட தா‌‌ண்டியா ‌பீ‌ல், இ‌ந்‌திய ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது வெ‌ள்ளைய‌ர்களை எ‌தி‌ர்‌த்து‌க் கடுமையாக‌ப் போராடினா‌ர்.





ம‌‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ன் மோ‌வ் எ‌ன்றழை‌க்க‌ப்படு‌ம் மா‌ல்வா பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து சா‌த்பூரா மலை‌த் தொட‌ர்களி‌ல் உ‌ள்ள ஜா‌ல்கா‌வ் வரை அவ‌ர் முடிசூடா ம‌ன்னராக இரு‌ந்து‌ள்ளா‌ர்.

‌பி‌ரி‌ட்டி‌ஷ்கார‌ர்க‌ளிட‌ம் கொள்ளையடி‌த்து அதனை ஏழை ம‌க்களு‌க்கு‌ம் மழைவா‌ழ் ம‌க்களு‌க்கு‌ம் டா‌ண்டியா ‌பீ‌ல் ப‌கி‌ர்‌ந்த‌ளி‌த்து‌ அவர்களின் வறுமையைப் போக்கியுள்ளார்.

டா‌ண்டியா ‌பீலைப் பிடி‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்தா‌ல் பெரு‌ம் ச‌ன்மான‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ம் அவரை‌ப் பிடி‌க்க முடிய‌வி‌ல்லை. அவரு‌க்கு‌ச் ‌சில அ‌திசய‌ச் ச‌க்‌திக‌ள் இரு‌ந்ததா அ‌ப்பகு‌தி ம‌க்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்
இ‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள பா‌ட்டா‌ல் பா‌ணி எ‌ன்ற ‌நீ‌ர்‌ வீ‌ழ்‌ச்‌சி‌க்கு அருகே செ‌ல்லு‌ம் இர‌யி‌ல் பாதை‌‌யில், டா‌ண்டியா பீலு‌க்கு‌‌ம் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் படை‌யினரு‌க்கு‌ம் இடையே மோத‌ல் ‌நிக‌ழ்‌ந்தது. அ‌தி‌ல் டா‌ண்டியா ‌பீ‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

அவ‌ர் இற‌ந்தத‌ற்கு‌ப் ‌பிறகு அ‌ந்த இர‌யி‌ல் பாதை‌‌யில் பல ‌விப‌த்து‌க்க‌ள் ஏ‌ற்ப‌ட்டன. இதற்கு‌க் காரண‌ம் டா‌ண்டியா ‌பீ‌ல் இற‌ந்ததே எ‌ன்று கூ‌றிய அ‌ப்பகு‌தி ம‌க்க‌ள், அ‌ந்த இர‌யி‌ல் பாதை‌க்கு அரு‌கிலேயே அவருக்கு கோ‌யிலை‌க் க‌ட்டின‌ர்.

அ‌ந்த‌க் கோ‌யி‌‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டத‌ற்கு‌ப் ‌பிறகு, அ‌ந்த வ‌ழியாக‌‌ச் செ‌ல்லு‌ம் இர‌யி‌ல்க‌ள் அனை‌த்து‌ம் அ‌ங்கு ‌சி‌றிது நேர‌ம் ‌நி‌ன்று டா‌ண்டியா ‌பீலு‌க்கு அ‌ஞ்ச‌லி செலு‌த்‌திவி‌‌ட்டு‌ச் செ‌ல்‌‌கின்றன. அப்படியேதுமில்லை என்று இர‌யி‌ல்வே ‌நி‌ர்வாக‌ம் மறு‌க்‌கிறது.





பா‌ட்டா‌ல் பா‌ணி‌யி‌ல் இரு‌ந்து காலாகுண்ட்டி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் இர‌யி‌ல் பாதை இ‌ங்கு ‌பி‌ரிவதா‌ல், ‌‌சி‌றிது நேர‌ம் இர‌யி‌ல்க‌ள் ‌நி‌ன்று பாதை மா‌ற்ற‌ப்ப‌ட்ட ‌பிறகு செ‌ல்வதாகவு‌ம், இ‌‌ந்த இர‌யி‌ல் பாதை மே‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் செ‌ல்வதா‌ல் ‌பிரே‌க் சோதனை செ‌ய்ய ‌நிறு‌த்த‌ப்படுவதாகவு‌ம், அ‌ப்பொழுது இர‌யி‌ல் பய‌ணிக‌ள் த‌ங்களது ‌சிரத்தை‌த் தா‌ழ்‌த்‌தி டா‌ண்டியா ‌‌பீலை வண‌ங்குவதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

ஆனா‌ல், அ‌ந்த வ‌ழியாக‌ச் செ‌ல்லு‌ம் பய‌ணிகளு‌க்கு‌‌த் தெ‌ரியு‌ம் உண்மை என்னவென்று. இ‌ங்கு ‌‌‌நிறு‌த்தாம‌ல் செ‌ன்ற இர‌யி‌ல்க‌ள் ‌விப‌த்‌தி‌ற்கு உ‌ள்ளானதாக அ‌ப்பகு‌தி ம‌க்க‌ள் சொ‌ல்‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ப்படி‌ப்ப‌ட்ட ஒரு ‌விடய‌த்தை‌ப் ப‌‌‌ற்‌றி ‌நீ‌ங்க‌ள் எ‌ன்ன கூறு‌கி‌‌றீ‌ர்க‌ள். எ‌ங்களு‌க்கு எழுது‌ங்க‌ள்.

மரணத்தோடு

நினைவெல்லாம்
நீநித்திரையில்லாமல்
நான்கனவெல்லாம்
நீகாலமெல்லாம்
கண்களை மூடியபடி
நான்உணவெல்லாம்
நீஉண்ண முடியாமல்
நான்மனதெல்லாம்
நீமகிழ்ச்சியோடு
நான்பிரிவெல்லாம்
நீமரணத்தோடு நான்

ஜோ‌யி‌ல் எ‌ன்பவ‌ர் எழு‌திய க‌‌விதைக‌ளி‌ல் ‌சில

கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்


யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசின் ஒரு அங்கமாக இருந்த கொசோவோவிற்கு யூகோஸ்லாவிய அதிபராக இருந்த டிட்டோ 1974 ஆம் ஆண்டு சுயாட்சி அளித்தார்.இன்றைய செர்பியாவின் வட பகுதியில் இருந்த வோஜ்வோடினாவிற்கும், தெற்கில் கொசோவோவிற்கும் மார்ஷல் டிட்டோ சுயாட்சியளித்து யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசை வலிமைபடுத்தினார்.ஆனால் டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, அதிபராக வந்த சுலோபோடான் மிலாசவிச், தனது அரசியல் செல்வாக்கை நிலைபடுத்திக் கொள்ள செர்பிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கொசோவோ அல்பானியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி, செர்பிய தேசியவாதத்தை வளர்த்து தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள மிலாசவிச் மேற்கொண்ட நடவடிக்கைகளே கொசோவோ விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டது.1989 ஆம் ஆண்டில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து கொசோவோவிற்கு அளிக்கப்பட்டிருந்த சுய ஆட்சி அதிகாரத்தை மிலாசவிச் ரத்து செய்தார். அதுமட்டுமின்றி, கொசோவோ அல்பானியர்களை, அரசுப் பணிகளில் இருந்தும், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புக்களிலிருந்தும் அகற்றி இன ஒழித்தல் நடவடிக்கையை வெளிப்படையாக செயல்படுத்தினார்.
webdunia photo
FILEடாக்டர் இப்ராஹிம் ருகோவா என்பவரின் தலைமையில் செர்பிய ஒடுக்குமுறையை எதிர்த்த கொசோவோ அல்பானியர்கள், தங்கள் பகுதியில் ஒரு நிழல் அரசை நிறுவினர். வன்முறை தவிர்த்து அமைதி வழியில் போராட்டத்தை துவக்கிய அல்பானியர்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டுமென கோரினர். ஆனால் அக்கோரிக்கையை மிலாசவிச் நிராகரித்தார்.செர்பிய ஒடுக்கலை எதிர்த்து 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டதையடுத்து கொசோவோவிலிருந்து 2 லட்சம் அல்பானியர்கள் வெளியேறினர்.செர்பிய பெரும்பான்மை மேலாதிக்க அரசால் கடுமையான இன ஒடுக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், இப்ராஹிம் ருகோவா தலைமையிலான மக்கள் போராட்டம் அமைதி வழியிலேயே தங்கள் உரிமைகளை மீட்கப் போராடியது. இந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு மற்றொரு பிரகடனத்தின் முலம் கொசோவோவின் நாடாளுமன்றத்தை அதிபர் மிலாசவிச் நீக்கினார்.இதைக் கண்டு அயராத கொசோவோ மக்கள் தேர்தலை நடத்தி இப்ராஹிம் ருகோவாவை அதிபராக்கினர். 130 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தையும் அமைத்தனர். இதனையடுத்து கொசோவோ அல்பானியர்களை கடுமையாக ஒடுக்கத் துவங்கினார் மிலாசவிச். அதுவரை அமைதி வழியில் போராடிய கொசோவோ மக்கள் ஆயுதமெடுத்தனர். கொசோவோ விடுதலை ராணுவம் அமைக்கப்பட்டது. அந்நிய நாட்டிற்குள் புகும் ஆக்கிரமிப்புப் படையைப் போல செர்பிய ராணுவமும், மற்ற ஆயுதப்படைகளும் கொசோவோவிற்குள் புகுந்து தாக்கின. பல்லாயிரக்கக்கான அல்பானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில்தான், 1998 ஆன் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, ஐ.நா. பாதுகாப்பு பேரவை, அமைதியாகப் போராடிய கொசோவோ மக்கள் மீது மிக அதிகப்படியான அடக்குமுறையை செர்பிய காவல்துறை கட்டவிழ்த்து விட்டதென்று கூறி கண்டனம் செய்தது மட்டுமின்றி, யூகோஸ்லாவியாவிற்கு எதிராக ஆயுதத் தடையும் விதித்து தீர்மானம் (எண் 1169) நிறைவேற்றியது. கொசோவோ மக்கள் மீது செர்பியா கட்டவிழுத்துவிட்ட வன்முறை ஐ.நா.வின் 7 வது விதிமுறைகளின் படி, சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்றும் பாதுகாப்புப் பேரவை தனது தீர்மானத்தில் கூறியது.இதற்குப் பிறகும் அல்பானியர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் குறையவில்லை, மாறாக அதிகரித்தது. கொசோவோ மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடன் தனது இன ஒடுக்கலை தொடர்ந்தது யூகோஸ்லாவிய அரசு. செர்பியாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள அல்பானியர்களை வன்முறையை ஏவி விரட்டியடித்தது. சொந்த நாட்டு மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் 3 லட்சம் அல்பானியர்கள் மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும் விரட்டப்பட்டனர்.இந்த நிலையில்தான் செர்பிய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து கொசோவோ மக்களைக் காக்க 1998 செப்டம்பரில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் நுழைந்து செர்பிய படைகளை வெளியேற்றின.கொசோவோவில் அமைதி நிலைநாட்டப்பட்டது. 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அதிகாரத்திற்குட்பட்ட இடைக்கால நிர்வாக அரசு ஏற்படுத்தப்பட்டது.
தன்னாட்சி உரிமை கோரி செர்பிய அரசுடன் கொசோவோ அரசியல் இயக்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத்தையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சுதந்திர பிரகடனம் செய்தது கொசோவோ.

‌சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்த மெ‌ன்பொருளை உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசாக வழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இ‌ந்த ப‌ரிசை பெறுவத‌ற்கு, த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சியை கரு‌த்‌தி‌ல் கொ‌‌ண்டு உருவா‌க்க‌ப்‌பட்ட மெ‌ன்பொருளாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மெ‌ன் பொரு‌‌ள் த‌னி ஒருவராலோ, கூ‌ட்டு முய‌ற்‌சியாலோ அ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலோ உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ஒ‌வ்வாருவரு‌ம் த‌ங்களை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், ப‌திவு‌‌க் க‌ட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை இயக்குன‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த் துறை இய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி வளாக‌ம் முத‌ல் தள‌ம், ஆ‌ல்சு சாலை, எழு‌ம்பூ‌ர் செ‌ன்னை-8" எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பெறலா‌ம் எ‌ன்று‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் மா‌ர்‌ச் 5‌ம் தே‌தி‌க்கு‌ள் வ‌ந்து சேர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஒ‌வ்வொரு ஆ‌‌ண்டு‌ம் சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொருளை உருவா‌க்‌கியவ‌ரை தே‌ர்வு செ‌ய்து, க‌ணி‌ய‌ன் பூ‌ங்குன்றனா‌ர் பெய‌ரி‌ல் ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌வதாக த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஹைக்கூ

காதலர்கள் ஏன் எப்பவும்
பொய்யே பேசுறாங்க?


அவங்க "மெய்"மறந்து
காதலிக்கிறவங்களாச்சே

இலங்கை

காணி நிலம் வேண்டும் பாரசக்தி

கவிதை நீ தானடி.

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி...
காதல் வேண்டுமா கவிதை வேண்டுமா ?
நிசசயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதைதான் வேன்டும் என்க்கு"-என்
கவிதை நீ தானடி.

எழுதியவர் : கூல்ஜிலாக்