தங்கை


அன்பு தங்கை என்று

ஒரு தேவதை

அன்புடன் இருந்தால்

இப்படித்தான் இருப்பாள்

என்ற எண்ணத்தை என்னுள்

விதைத்த இந்த ஆலமரம்

விழுது மண்ணில் விழுவதற்குள்

மறைந்து விட்டதே

சில மணி நேரங்களே

பேசியிருந்தாலும் அந்த

முகம் அறியாத பாச மலரை

மறக்க முடியவில்லை அன்பு

தங்கை நீ ஒவ்வொரு முறை

அழைக்கும் அண்ணா என்ற

அற்புதமான வார்த்தை

மரணநேரத்திலும் மறக்க முடியுமா

தங்க தாமரையே ஏன் என்னிடம்

இது வரை பேசவில்லை

உள்ளம் மட்டும் அல்ல

உடலும் சேர்ந்து வாடுகிறது

உன்னுடைய வார்த்தைகளும்

ஓராயிரம் அன்பு சக்தியை தாங்கி வரும்

மீண்டும் அந்த ஒலியை என் செவிகள்

கேட்டுமா அந்த சகோதரி இங்கு

வந்து பின்னூட்டம் இடுமா?

காத்திருப்பது நான் மட்டும் அல்ல

எனது கைபேசியும் தான்

கலங்க விடாமல் மீண்டும்

கதைப்பாயா என்னை ஈன்றவளே...

No comments: